
கோலாலம்பூர், ஜூன் 26 – ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சியேட் சாடிக் சியேட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman) விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க மூடாவின் மத்திய செயற்குழு (CEC) முடிவெடுத்துள்ளது.
எம்.பி.யாக இருந்த காலம் முழுவதும் மூடாவின் கண்ணியத்தையும் நல்ல பெயரையும் அவர் தொடர்ந்து பாதுகாத்து வருவதாக கட்சியின் தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.
மூடாவின் தலைவராக இருக்கும் சியேட் சாடிக், ஊழல் விசாரணையின் போது பதவி விலகியுள்ளத்தைத் தொடர்ந்து அவர் தலைமைக்கு மீண்டும் திரும்புவதன் மூலம் மூடாவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதோடு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சியை நன்னிலையில் வழிநடத்த முடியுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று, சாடிக் குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT), கட்சி நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.