Latestமலேசியா

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி படுகொலையில் சந்தேக நபர்கள் கைது

செப்பாங், ஜூன்-27 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி ஒருவரது படுகொலையில் 3 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆண், இருவர் பெண்களாவர்.

19 முதல் 20 வயதுக்குட்பட்ட அம்மூவரும் கொல்லப்பட்ட மாணவிக்கு அறிமுகமானவர்கள் என நம்பப்படுகிறது.

நேற்று காலை 9 மணி தொடக்கம் இன்று விடியற்காலை 2 மணி வரை ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான் கெமன்சேவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் மூவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

செப்பாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நோர்ஹிசாம் பஹாமான் அதனை உறுதிப்படுத்தினார்.

விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட ஏதுவாக இன்று காலை செம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவர்.

20 வயது Maniishapriet Kaur Akhara கடந்த செவ்வாய்க்கிழமை, மாணவர் குடியிருப்பில் இறந்துகிடந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!