Latestஇந்தியாஉலகம்சினிமா

உலகநாயகனின் வீட்டுக் கதவைத் தட்டிய ஆஸ்கார் குழு; விருதுக் குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு

கலிஃபோர்னியா, ஜூன்-28 – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்… இந்தியத் திரையுலகின் பெருமை…என்ற சிறப்புக்குரியவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

இன்று, உலக சினிமாவின் உச்சமாக கருதப்படும் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அவரின் வீடு தேடி வந்துள்ளது.

இந்த கௌரவம் இந்திய நடிகர்களில் மிகக் சிலருக்கு மட்டுமே!

நடிப்பு, இயக்கம், பாடல்கள், திரைக்கதை… எல்லாவற்றிலும் அசாத்திய ஆளுமை…
இவரின் ஹே ராம், இந்தியன், குருதிப்புனல் உள்ளிட்ட 7 படங்கள் ஆஸ்காருக்காக தேர்வாகின.

ஆனால் இன்று, வெறும் போட்டியாளராக அல்ல – ஆஸ்கார் விருதுக் குழுவில் முடிவெடுக்கும் ஒரு முக்கிய உறுப்பினராக சேர கமல்ஹாசன் அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் இந்த கௌரவத்தை 2022-ஆம் ஆண்டில் நடிகர் சூர்யா பெற்றிருந்தார்.

2025-ல் அந்தப் பட்டியலில் சேரும் இரண்டாவது இந்தியராக கமல்ஹாசன் திகழ்கிறார்.

அவருடன் பிரபல ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா உட்பட, உலகளவில் 534 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இது விருதல்ல… ஒரு பெரும் அங்கீகாரம்.

ஒரு மாபெரும் கலைஞர் தனது வாழ்க்கை முழுதும் போட்ட உழைப்புக்கு வழங்கப்படும் சான்று.

இது கமல்ஹாசனுக்கான காலம் கடந்த மரியாதை; என்றாலும் இப்போதாவது கொடுத்தார்களே என நாம் திருப்தி அடைந்துகொள்ள வேண்டியது தான்.

இது தமிழ் சினிமாவின் வெற்றி; இந்தியத் திரையுலகிற்கே பெருமை

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!