Latestமலேசியா

தேர்தல் காலத்தில் மட்டும் உழைப்பவர்கள் அல்லர் நாங்கள்; பெரிக்காத்தான் சஞ்சீவன்

ஜெராம் பாடாங், ஜூன்-27 – எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் காலத்தில் மட்டும் பணியாற்றுவதில்லை.

மாறாக, எல்லா காலத்திலும் மக்கள் சேவை செய்வதே தங்கள் பாணியென, நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.

தேர்தல் காலத்துக்கு முன்பே கட்சியினரைக் களமிறக்கி தொகுதி மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

உதாரணமாக, நெகிரி செம்பிலானிலும் பெரிக்காத்தான் எதிர்கட்சி என்றாலும் ஏராளமான தொகுதிகளில் மக்கள் சேவை மையங்களைத் திறந்து நீண்ட காலமாகவே சேவையாற்றி வருகிறோம்.

வெற்று வாக்குறுதிகள் வழங்குவது பெரிக்காத்தான் பாணி அல்ல என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் சொன்னார்.

தேர்தல் காலத்தில் மட்டும் களத்தில் இறங்கி சேவையாற்றும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!