Latestமலேசியா

பிரதமர் அன்வாருக்கு வெளிநாடுகளில் 20 வங்கிகளில் கணக்கா? MACC மறுப்பு

கோலாலம்பூர், செப் -26,

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்ததாக 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மீண்டும் நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் டிக்டோக்கில் வைரலானதாகவும், ஊழல் தடுப்பு நிறுவனம் MACC என்று அழைக்கப்படுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு BPR எனப்படும் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் இது குறித்து விசாரிக்கப்பட்டதாக MACC தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுடன் அவரை இணைக்கக்கூடிய எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணையின் முடிவுகள் கண்டறிந்தன.

விசாரணை முடிவுகளின் விளக்கம், ACA-வின் முன்னாள் விசாரணை புலனாய்வு இயக்குநர் அப்துல் ரசாக் இட்ரிஸ் 2009-ல் அளித்த சத்தியப்பிரமாண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இன்று MACC வெளியயிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ அடிப்படையின்றி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அல்லது தனிநபர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் எந்தவொரு ஊகத்தையும் வெளியிட வேண்டாம் என்று MACC அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளது. நாட்டின் சட்டங்களின்படி சுயமாகவும் , வெளிப்படையாகவும், நேர்மையுடனும் விசாரணைகளை நடத்துவதற்கு MACC உறுதிபூண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி 2013-ல் நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தகவல் வெளிப்படுத்தல் வலைத்தளம் அன்வாரின் வங்கிக் கணக்குகளின் பட்டியலை வெளியிட மறுத்ததாக MACC கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!