Latest
திருமண மேடையில் மணமகனை குத்திய விருந்தினர் – ட்ரோன் துரத்தி பிடித்த அதிர்ச்சி சம்பவம்

லக்னோவ், நவம்பர்-13,
இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணமகனை மேடையிலேயே விருந்தினர் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மணப்பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து துரத்தி வந்த ஆடவன், திருமணத்துக்கு வந்தபோது இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.
ஆனால், அங்கு தான் ஒரு திருப்பம்…திருமண வீடியோவுக்காக பயன்படுத்தப்பட்ட ட்ரோன், குற்றவாளியை 2 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி, அவன் தப்பிச் செல்லும் காட்சிகளை பதிவுச் செய்தது.
இதன் மூலம் போலீஸார் விரைவில் அவனைக் கைதுச் செய்தனர்.
குத்துப்பட்ட மணமகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, திருமண ட்ரோன் குற்றவாளிகளை பிடிக்க உதவிய சம்பவமாக மாறியுள்ளது.



