
மிரி, சரவாக், டிசம்பர் 4 – நேற்று மாலை சரவாக் ‘Jalan Miri Bypass’ சாலையில், ட்ரெய்லர் மற்றும் கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவ்விபத்தில் ட்ரெய்லர் ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM) தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்பு பணி வேலைகளில் உடனடியாக ஈடுப்பட்டனர்.
ட்ரெய்லரின் மேல் பகுதி நசுங்கிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் மரணமைடைந்த இருவரையும் வெளியேற்றினர். பின்னர் அவர்களின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.



