Latestமலேசியா

மக்கள் சுமையை குறைக்க டோல் உயர்வு ஒத்திவைப்பு – பொதுப்பணித்துறை அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – டோல் கட்டண உயர்வை எவ்வளவு காலம் வரை தொடர்ச்சியாக முடக்கி வைக்க முடியும் என்பது அமைச்சரவையின் முடிவிற்கு உட்பட்டது என பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி (YB Dato Sri Alexander Nanta Linggi) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 2026ஆம் ஆண்டிற்கான 10 நெடுஞ்சாலை ஒப்பந்தங்களுக்கு சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது என முடிவு செய்யப்பட்டது.

அரசின் பேச்சாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் (Datuk Fahmi Fadzil) கூறுகையில், இந்த முடிவு அரசுக்கு நிதிசுமையை ஏற்படுத்தினாலும், அந்தச் செலவினை அரசு ஏற்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் விளக்கிய நந்தா லிங்கி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையை கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டணப் பாரம் ஏற்படாமல் தடுப்பதே அரசின் நோக்கம் என்றார்.

தற்போதுள்ள ஒப்பந்த நிபந்தனைகளின்படி, சுங்கக் கட்டணத்தை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி மறுபரிசீலனை செய்து உயர்த்துவதற்கு உரிமை இருந்தாலும், மக்களின் நலனை முன்னிறுத்தி அரசு அதனை ஒத்திவைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!