Latestமலேசியா

பெர்லிஸில் 8 மாதக் குழந்தை தலைக்காயம் காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் பராமரிப்பாளர் கைது

ஆராவ், ஏப்ரல்-29-பெர்லிஸ், ஆராவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பராமரிப்பில் இருந்த 8 மாத பெண் குழந்தை, பலத்த தலைக்காயம் காரணமாக உயிரிழந்துள்ளது.

​ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும், அதன் விளைவாக மூளையில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டதுமே மரணத்திற்குக் காரணம் என்றும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

​முன்னதாக ஏப்ரல் 15-ஆம் தேதி குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக, பராமரிப்பாளர் குழந்தையின் தாய்க்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் ஏப்ரல் 22-ஆம் தேதி உயிரிழந்தது.

ஏற்கனவே குழந்தையின் மூக்கு மற்றும் நெற்றியில் காயங்கள் இருந்ததை தாய் கவனித்துள்ளார்.

அப்போது பராமரிப்பாளரின் 6 வயது குழந்தை தவறுதலாகக் கீழே போட்டதால் அக்காயம் ஏற்பட்டதாம்.

எனினும், குழந்தைக்கு அப்போது ஒன்றும் ஆகாததால், தாய் மருத்துவனைக்குக் கூட்டிச் செல்லவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 16 வரை போலீஸ் ஜாமீனில் பராமரிப்பாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், 2001 சிறார் சட்டத்தின் கீழ் அலட்சியம் மற்றும் சித்திரவதை பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!