Latestமலேசியா

AI உதவியுடன் இலவசத் தமிழ்ப் பெயர் இணையச் செயலியை உருவாக்கிய மலேசியத் தமிழர் முகிலன் முருகன்

கோலாலம்பூர், மே-2, அழகிய தமிழ்ப்பெயர் இணையப்பக்கம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரங்களுக்குள் அதனை செயல்வடிமாக்கிக் காட்டியுள்ளார் மலேசியத் தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன்.

உலகத் தமிழின மக்களுக்காக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் தமிழ்ப்பெயர் இணையச் செயலியை அவர் உருவாக்கியுள்ளார்.

நல்ல தமிழ்ப்பெயர்கள் எளிமையாக விரல்நுணியில் தமிழ்மக்களுக்குக் கிடைக்க உதவும் பெருநோக்கத்துடன் tamilname.com செயலி வெளியிடப்பட்டுள்ளது.

இச்செயலியில் 60,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சோதிடம் மற்றும் எண்கணித அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தாங்கள் விரும்பும் புதுமைப் பெயர்களை பயனர்கள் தேட முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு பெயருக்கும் அதன் பொருள் விளக்கம், பெயரின் சிறப்புக்கூறுகள் மற்றும் வரலாற்று தொடர்புச் செய்தியும் உள்ளடக்கியுள்ளதாக முகிலன் கூறுகிறார்.

நட்சத்திரம், இராசி வானியல் அறிவியல் விளக்கமும் அனைவருக்கும் விளங்கும் வகையில் கொடுக்கப்படுள்ளது.

தொழிலாளர் தினமான நேற்று அதன் முன்னோட்ட பதிப்பை இலவசமாக தமிழ்-ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அவர் வெளியிட்டுள்ளார்.

எனவே விரைவில் பிறக்கப்போகும் தமிழ்க்குழந்தை பெற்றோர்களுக்கு, குடும்ப உறவுகளுக்கு இதனை அறிமுகப்படுத்தி வருங்காலத் தமிழினத்தின் முகவரி தொடர்ந்து நிலைத்திருக்க இதனைப் பகிர்ந்து உதவுமாறு முகிலக் கேட்டுக் கொண்டார்.

தொழிட்நுட்ப உலகில் மலேசியத் தமிழர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு முகிலன் முருகன் போன்றேரே சாட்சி.

அவர் உருவாக்கியுள்ள இந்த tamilname.com இணையச் செயலி தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!