Latestமலேசியா

BUDI95 திட்டத்தை தவறாக பயன்படுத்தினால் சிறை, RM20,000 அபராதம்

கோலாலம்பூர், மே 29 – மக்கள் மற்றவர்களின் MyKad-ஐ பயன்படுத்தி RON95 பெட்ரோல் மானியத்தை பெற முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சு எச்சரித்துள்ளது.

அதன்படி, BUDI95 திட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

BUDI95 திட்டத்தின் கீழ் தகுதியான மலேசியர்கள் லிட்டருக்கு 1.99 ரிங்கிட் விலையில் RON95 பெட்ரோலை வாங்க முடியும். மாதத்திற்கு 200 லிட்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது மானியம் இல்லாத RON95 விலை 3.92 ரிங்கிட் ஆக உள்ளது.

மேலும், பெட்ரோல் நிலையங்கள் MyKad சரிபார்ப்பை கட்டாயமாக செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. MyKad-ஐ நேரில் சரிபார்க்காமல் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

BUDI95 பயனாளர்கள் தங்களின் பரிவர்த்தனை பதிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்து, சந்தேகமான பயன்பாடு இருந்தால் உடனடியாக போலீஸ் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!