
ஜகார்த்தா, மே-4- மலேசியாவைச் சேர்ந்த மலையேறி ஒருவர், இந்தோனேசிய எரிமலையிலிருந்து தவறி விழுந்திருக்கின்றார்.
வட நூசா தெங்காரா, லோம்போக் தீவில் உள்ள ரிஞ்ஞானி எரிமலைப் பகுதியில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தோனேசிய தேசியப் பூங்கா அதனை உறுதிப்படுத்தியது.
பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து தேடல் & மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
RAG என சுருக்கமாக அடையாளம் கூறப்பட்ட அவ்வாடவர், 23 பேர் கொண்ட குழுவுடன் மே 1-ஆம் தேதி அந்த மலையேறும் நடவடிக்கையில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென நிதானமிழந்து அவர் விழுந்ததாகத் தெரிகிறது.
மலையேறுவது உடலுக்கு உற்சாகமான நடவடிக்கை தான்; ஆனால் பாதுகாப்பு அதை விட முக்கியமென்பதால், மலையேறிகள் அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென தேசியப் பூங்கா நினைவுறுத்தியது.