
கோலாலம்பூர், ஜூன்-6 – ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு, இன்று தொடங்கி ஜூன் 9 வரை Op Lancar சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில் நாடு முழுவதும் hotspot எனப்படும் நெரிசல் மிகுந்த இடங்களில் 1,858 அதிகாரிகளும் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, கூட்டரசு சாலைகள் மாநில சாலைகள், நகர சாலைகளும் அவற்றில் அடங்கும்.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையான JSPT-யின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி அதனைத் தெரிவித்தார்.
ஹஜ் பெருநாளுக்காக ஊர் திரும்பும் போதும், பெருநாள் முடிந்து வரும் போதும் மக்கள் சுமூகமான போக்குவரத்தை அனுபவிக்க, இந்த Op Lancar ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் குறிப்பாக சொந்த ஊருக்குத் திரும்புவோர், சாலைப் போக்குவரத்து குறித்த ஆகக் கடைசி நிலவரங்களை JSPT அல்லது நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களிலோ தெரிந்துகொள்ளலாம்.
திட்டமிட்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இது உறுதுணையாக இருக்குமென யுஸ்ரி ஹசான் சொன்னார்.