Latest
RM35,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் முன்னாள் துணை அரசு இயக்குநரை கைதுச் செய்த MACC

ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7,
35,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் அரசுத் துறையொன்றின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளைக் கைதுச் செய்துள்ளது.
பினாங்கு MACC இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி அதனை உறுதிப்படுத்தினார்.சந்தேக நபர், 50 வயது மதிக்கத்தக்க ஆடவராவார்.
இன்று காலை 10 மணியளவில் பினாங்கு MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது அவர் கைதானார்.
2022-ஆம் ஆண்டு, அவர் பணியாற்றிய துறையில் குத்தகைத்தாரருக்கு திட்ட ஒப்புதல் வழங்கியதற்காக, தனிப்பட்ட வங்கிக் கணக்கிலும், கையில் ரொக்கமாகவும் அவர் அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
24 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு அந்நபர் MACC உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



