Latestமலேசியா

சபாவில், முதலை தாக்கியதில் முதியவர் படுகாயம்; தண்ணீர் எடுக்கச் சென்ற போது நேர்ந்த விபரீதம்

குடாட், ஜனவரி 16 – சபா, குடாட், பாங்கி தீவிலுள்ள, கம்போங் டமரன் ஆற்றில், தண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் ஒருவர், முதலையால் தாக்கப்பட்டார்.

அதனால், 79 வயதான அந்த முதியவர், கைகளிலும், கால்களிலும் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.

அச்சம்பவம் குறித்து, நேற்று நண்பகல் மணி 1.53 வாக்கில், பாதிக்கப்பட்ட முதியவரின் உறவுக்காரர் ஒருவரிடமிருந்து, தகவல் கிடைத்ததை, குடாட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹரிஸ் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

வீட்டிற்கு அருகிலுள்ள, ஆற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது அம்முதியவர் முதலையால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

எனினும், கிராம மக்களால் காப்பாற்றப்பட்ட அவர், உடனடியாக குடாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்சமயம், அவரது நிலை சீராக இருக்கும் வேளை ; அச்சம்பவத்தை போலீசார், சபா வனவிலங்கு துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக முஹமட் ஹரிஸ் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!