குவாலா திரங்கானு, ஜனவரி 2 – திரங்கானு, குவாலா நெருஸிலுள்ள, புக்கிட் துங்கால் ஆரம்ப பள்ளியில் பணிப்புரிந்த ஆசிரியை ஒருவர், தனது வாடகை வீட்டில் இறந்து கிடக்க காணப்பட்டார்.
நேற்று மாலை மணி 5.40 வாக்கில், 55 வயது நோர்சியா மூடா எனும் அந்த கணித ஆசிரியை இறந்து கிடந்ததை கண்ட வீட்டின் உரிமையாளர், உடனடியாக போலீசுக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய போலீசார் சவப்பரிசோதனை அறிக்கைகாக காத்திருக்கின்றனர்.