
அலோஸ்டார், மே 14 – முகநூல் மூலம் Yemen நாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட ஒருவருடன் அறிமுகமான காதல் மோசடியினால் பெண் ஒருவர் கிட்டத்தட்ட 10 லட்சம் ரிங்கிட் இழப்புக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அந்த நபருடன் அறிமுகமானமான பின்னர் அப்பெண் 925,850 ரிங்கிட்டை இழந்துள்ளதாக கெடா வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் Superintendan லோய் யூ லிக் ( Loi Yew Lik ) தெரிவித்தார்.
வாட்சப் செயலி எண் மூலம் சந்தப்பட்ட சந்தேகப் நபருடன் அப்பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகக் காலக்கட்டத்தின்போது சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் தன்னை திருமணம் செய்து கொள்வதற்கு அடையாளமாக இரண்டு மோதிரங்களையும் அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு பிப்ரவரி 5 ஆம்தேதி தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மருத்துவ செலவுக்காக பணம் கொடுத்து உதவும்படியும் திருமணம் செய்வதற்கு மலேசியா வரும்போது அப்பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி பிப்ரவரி 5ஆம்தேதி முதல் மார்ச் 25ஆம்தேதிவரை 15 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அந்த ஆடவருக்கு 166 முறை கட்டம் கட்டமாக மொத்தம் 925,800 ரிங்கிட்டை அப்பெண் பட்டுவாடா செய்துள்ளார்.
எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப அந்த ஆடவர் இந்நாட்டிற்கு வரத் தவறியதோடு தனது முகநூல் கணக்கையும் முடக்கம் செய்துவிட்டார். இதனைத் தொடர்ந்து தாம் ஏமாந்ததை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் மே 12 ஆம் தேதியன்று கோலால மூடா போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததால் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கிழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Superintendan Loi தெரிவித்தார்.