கிள்ளான், டிசம்பர் 22 – கிள்ளான், தாமான் ஸ்ரீ ஆண்டளாஸில், இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாத LRT நிலையம் ஒன்றில், தூக்கிலிடப்பட்டவாறு சடலம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால், சுற்று வட்டார மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை மணி 7.30 வாக்கில், அனைவரும் வேலைக்கு செல்லும் பரபரப்பான நேரத்தில், அச்சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட LRT நிலையத்திற்கு செல்லும் முதன்மை சாலையில், போலீஸ் தடுப்பு போடப்பட்டிருந்ததும், அருகில் ஆம்புலன்ஸ் ஒன்று நிற்றுக் கொண்டிருந்ததுமே அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அதே சமயம், பெண் ஒருவர் தூக்கில் தொங்கும் புகைப்படம் ஒன்றும், தாமான் ஸ்ரீ ஆண்டளாஸ் குடியிருப்பாளர்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தை தாம் நேரில் கண்டதாக பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
உயிரிழந்தவர், சம்பந்தப்பட்ட பகுதியில் அடிக்கடி தென்படும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அச்சம்பவம் தொடர்பில், போலீசார் இன்னும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.