Latestமலேசியா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 23,011 பேர் நான்கு மாநிலங்களில் 103 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர், டிச 29 –  நான்கு மாநிலங்களில் வெள்ளத்தின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின்  எண்ணிக்கை 23,008 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் 103 நிவாரண மையங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  எனினும் கிளந்தான் மாநிலத்தில்  மட்டும் இன்னமும்  19,716 பேர்  நான்கு மாவட்டங்களில் உள்ள  53 நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிர்வாக மையமான Nadma  தெரிவித்துள்ளது. 

திரெங்கானு வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,025 ஆக குறைந்துள்ளது.  அவர்கள் அனைவரும்  ஆறு மாவட்டங்களிலுள்ள  37 நிவாரண மையங்களில்  தங்கியுள்ளனர். ஜோகூரில் செகாமட்டிலுள்ள    மூன்று நிவாரண மையங்களில்  16 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தங்கியுள்ளனர்.  

பகாங்கில்  இருந்துவரும் 10 நிவாரண மையங்களில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் தங்கியுள்ளனர். கேமரன் மலையில்  ஏற்பட்ட நிலச்சரிவினால்  பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களைச் சேர்ந்த  87பேரும்  நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!