கோலாலம்பூர், ஜன 13 – முகநூலில் அறிமுகமான பெண் மூலம் பிட்காயின் (Bitcoin) திட்டத்தினால் ஆடவர் ஒருவர் 619, 419 ரிங்கிட் இழந்தார். 51 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம்தேதி முகநூல் மூலம் பெண் ஒருவரின் அறிமுகத்திற்குள்ளாகி பிறகு அவரிடம் வாட்ஸ்அப் தொடர்பில் இருந்தபோது இந்த தொகையை ஏமாந்துள்ளார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் வர்த்தகப் பிரிவின் இயக்குனர் ரம்லி முகமட் யூசுப் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபர் அந்த பெண் தெரிவித்த 15 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 25 முறை 619,419 ரிங்கிட்டை பட்டுவாடா செய்து ஏமாந்துள்ளதாக ரம்லி தெரிவித்தார். பணத்தை இழந்த அந்த ஆடவர் இதுகுறித்து இம்மாதம் 5 ஆம் தேதி ரவாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.