Latestமலேசியா

ஓராண்டு காலத்தில் முந்தைய 3 பிரதமர்களுக்கு இருந்த ஆதரவோடு ஒப்பிடுகையில் அன்வாருக்கான ஆதரவு கூடுதலாக உள்ளது – ரபிசி

புத்ராஜெயா, நவ 25 – ஓராண்டு ஆட்சிக்கு வந்தப் பிறகு முந்தைய 3 பிரதமர்களை விட அன்வாருக்கு கிடைத்திருக்கும் ஆதரவு கூடுதல் என்றே கூறியிருக்க்கின்றார் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான ரபிசி ரம்லி. கடந்த காலங்களில் பிரதமராக இருந்த மகாதீர், முஹிடின் மற்றும் இஸ்மாயில் சப்ரி ஓராண்டு ஆட்சிக்குப் பின் அவர்களுக்கு இருந்த் ஆதரவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அன்வாருக்கு இருக்கும் ஆதரவும் பிரபலமும் இன்ன்னும் வலுவாகவே இருப்பதாக அவர் புத்ராஜெயா PICCயில் நடைப்பெற்று வரும் பி.கே.ஆர் மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளடர்களிடம் பேசியப்போது தெரிவித்தார்.

தேர்தலுக்குப் முன்பு தனக்கிருந்த ஆதரவை பெரிக்காதான் நேஷனல் தற்காப்பதில் சிரமப்பட்டு வரும் நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்பதை அவர்களுடைய ஆதரவாளர்களும் உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, பி.கே.ஆர் கட்சி எல்லா சமூகங்களுக்கும் முன்னுரிமைத் தரும் ஒரு கட்சி என அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அடாம் அலி தெரிவித்திருக்கிறார்.

அன்வார் ஆட்சியின் கீழ் எந்தவொரு இனமும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் கூறினார். எல்லோரும் ஒரு சுமூகமான வாழ்வியலை அனுபவிக்கும் வகையில் எவரும் இனம், மதம் என்ற அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிப் பாதையிலிருந்து ஒதுக்கப்பட மாட்டார்கள் என அவர் உறுதி அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!