Latestமலேசியா

மலாக்காவில், 12 வயது மாணவி கற்பழிப்பு ; மூன்றாம் படிவ மாணவன் கைது

மலாக்கா, பிப்ரவரி 6 – மலாக்கா, ஜாசின், பெம்பனிலுள்ள, வீடொன்றில், 12 வயது மாணவியை கற்பழித்ததாக நம்பப்படும் மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

கடந்த சனிக்கிழமை, மாலை மணி நான்குக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி அது குறித்து தனது 43 வயது தாயிடம் கூறியதை தொடர்ந்து, அவர் செய்த போலீஸ் புகாரை அடுத்து அந்த இழிவான செயல் அம்பலமானதாக, ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் அஹ்மாட் ஜமில் ரட்ஜி தெரிவித்தார்.

கடந்தாண்டு பாதியிலிருந்தே, அச்சிறுமி அவனது பாலியல் வன்கொடுமைகளுக்கு இலக்காகி வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, மாலை மணி நான்குக்கும், ஐந்துக்கும் இடைப்பட்ட நேரத்தில், அவன் அச்சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதோடு, கற்பழித்ததாக கூறப்படும் வேளை ; நேற்று முன்தினம் அதிகாலை மணி ஐந்து வாக்கில் அவன் மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளான்.

அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை மணி நான்கு வாக்கில் அவன் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!