Latestமலேசியா

குறைவான மாத தவணைப் பணத்தைச் செலுத்தும் நோக்கில் வேண்டுமென்றே திவாலாகும் நபர்கள்; அதிர்ச்சித் தகவல் அம்பலம்

கோலாலம்பூர், ஜனவரி-19, வங்கிக் கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணத்தைக் குறைவாகச் செலுத்தும் நோக்கில், பலர் வேண்டுமென்றே திவாலாவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய திவால் துறை அதனை அம்பலப்படுத்தியது.

திவாலானவர்களுக்கு, அவர்களின் சக்தியைப் பொருத்து மாதாந்திர தவணைப் பணத்தை திவால் துறை நிர்ணயம் செய்து வருகிறது.

அவ்வாறு, பெரியக் கடன்களுக்கு நிர்ணயம் செய்யப்படும் தவணைப் பணம் பெரும்பாலும் முழுக் கடனையும் அடைக்கப் போதுமானதாக இருக்காது என அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ எம். பக்ரி அப்துல் மஜித் (Datuk M. Bakri Abd Majid) கூறினார்.

மாத தவணைப் பணம் குறைவே என்பதால், திவால் நிலையானது, ஒருவரின் வாழ்க்கையில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதில்லை;

உதாரணத்திற்கு, 1 மில்லியன் ரிங்கிட் வரை கடன் வைத்திருப்பதால் திவாலாகி வேலையும் பறிபோன அரசு ஊழியருக்கு, மாதத் தவணைப் பணமாக 200 ரிங்கிட் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக முன்பு அவர் செலுத்தி வந்த மாதாந்திர தவணைப் பணத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே.

இதை நன்கு புரிந்துகொண்டு தான் சிலர் வேண்டுமென்றே திவாலாகின்றனர்.

திவால் நிலை என்பது நிதி சிக்கல்களில் உள்ள தனிநபர்களுக்கு உதவுவதற்காகவே தவிர, அவர்கள் கடனைத் தவிர்ப்பதற்கான குறுக்கு வழி அல்ல என டத்தோ பக்ரி நினைவுறுத்தினார்.

3 முதல் 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படும் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யும் பட்சத்தில் ஒருவர் திவாலிலிருந்து விடுவிக்கப்படுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!