Latestசிங்கப்பூர்
இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த்திற்கு சிங்கப்பூரில் உயரிய விருது
சிங்கப்பூர், டிச 8: சிங்கப்பூரில் கலை, சலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், 2023ஆம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற 80 வயதான இந்திய பெண் எழுத்தாளரான மீரா சந்த்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மீரா சந்த் பல்வேறு கலாச்சார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர்.
மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசிய நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீட் ஆகியோரும் இந்த உயரிய விருதை சிங்கப்பூரின் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் தர்மன் சண்முகத்திடம் பெற்றுக் கொண்டனர்.