
லங்காவி, மே-13 – கெடா, லங்காவியில் கார் தடம்புரண்டு 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், ஹோட்டல் ஊழியரான 22 வயது இளைஞர் காயமடைந்தார்.
நேற்று காலை ஜாலான் தெலுக் யூ கடற்கரை அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து பாடாங் மாட்சீராட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
கையிலும் காலிலும் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலைக்குச் செல்லும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளித்தில் விழுந்து பின்னர் கடலில் போய் விழுந்தது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது