Latest

லோரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பில் 3 போலீஸ்காரர்கள் கைது

ஜோகூர் பாரு, மார்ச் 28 – லோரி ஓட்டுனர்களிடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பில் மூன்று போலீஸ்காரர்களை MACC கைது செய்துள்ளது. 36 மற்றும் 42 வயதுடைய அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நேற்றிரவு 7 மணியளவில் ஜோகூர் MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். மெர்சிங் வட்டாரத்திலுள்ள செம்பனை பழம் மற்றும் உரங்களை ஏற்றிச் செல்லும் லோரி ஓட்டுனர்களிடம் அந்த மூன்று போலீஸ்காரர்களும் 7,800 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த சந்தேகப் பேர்வழிகள் லோரி ஓட்டுனர்களிடம் பணத்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. MACC யின் 2009ஆம் ஆண்டு சட்டத்தின் 17ஆவது உட்பிரிவு (a) யின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதால் அந்த மூன்று போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டதை Johor MACC இயக்குனர் டத்தோ Azmi Alias உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!