மஞ்சோங், பிப்ரவரி 5 – பேராக், மஞ்சோங்கில், 16 வயது மாணவியை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த “சார்ஜன்ட்” ஒருவன், போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
அந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை முழுமை பெற்றுள்ள வேளை ; அது மேல் நடவடிக்கைகாக மாநில அரசாங்க தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சார்ஜன்ட்னுக்கு எதிராக குற்றம் சாட்டுவதா? அல்லது விசாரணையை தொடர்வதா என்பது குறித்து மாநில அரசாங்க துணை வழக்கறிஞரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் யுஸ்ரி சொன்னார்.
முன்னதாக, நான்காம் படிவ மாணவி ஒருவர், 42 வயது சார்ஜன்ட் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட யுவதி, தனது தாயாரிடம் அது கூறியதை தொடர்ந்து, அவர் செய்த புகாரை அடுத்து அந்த சார்ஜன்ட்னின் செயல் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.