
பெடோங், ஜூன்-2 – கெடா, பெடோங்கில் அமைந்துள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் அதன் வேந்தர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரனின் முழு ஒத்துழைப்போடு முதன் முறையான முவாய் தாய் குத்துச் சண்டைப் போட்டியை மிகச் சிறப்பாக ஏற்று நடத்தியது.
மே 31-ஆம் தேதி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கெடா மாநில ம.இ.கா ஒத்துழைப்புடன் ம.இ.கா – MIED விளையாட்டுப் பிரிவும் Gurumu Mix Martial Arts Academy-யும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 பெண்கள் உட்பட 170 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
அவர்களில் 70 பேர் இந்தியர்கள், 100 பேர் மலாய்க்காரர்கள் ஆவர்.
13 வயதுக்கு கீழ்பட்ட பிரிவில் 34 சிறார் போட்டியாளர்கள் கலந்துகொண்டதும் சிறப்பம்சமாகும்.
ஜூனியர், அமெச்சூர், புரோ மற்றும் VIP Title என 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு குடும்பத்தார் பொது மக்கள் என சுமார் 1,000 பேர் வரை போட்டியை கண்டுகளிக்க வந்திருந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ Dr எஸ். ஆனந்தன், கெடா ம.இ.கா தலைவர் எஸ்.கே.சுரேஸ், ஏய்ம்ஸ்ட் தலைமை செயலதிகாரி பேராசிரியர் Dr கிரண் ரெட்டி, டத்தோ ஜே. தினகரன், டத்தோ AT குமாரராஜா, Gurumu MMA Academy தோற்றுநர் மாஸ்டர் பிரகாஸ், ம.இ.கா விளையாட்டுப் பிரிவின் தலைவர் அண்ட்ரூ டேவிட் உள்ளிட்டோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டி குறிப்பாக நம் இந்தியப் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்ததாக, அண்ட்ரூ டேவிட் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இது வெறும் தொடக்கமே; இனி தொடர்ந்து இப்போட்டி நடத்தப்படும் எனக் கூறிய அண்ட்ரூ, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் பேராதரவுக்கு நன்றித் தெரிவித்தார்.
கல்வி ஒன்றே நம் சமூகம் முன்னேற முதன்மை ஆயுதம். அதனை முன்னிருத்தி செயல்படும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன், கல்வியோடு விளையாட்டும் ஒன்றிணைவது ஒவ்வொரு மாணவனையும் சுயகட்டுப்பாட்டோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்கும் என நம்புகின்றார். அதன் ஒரு பகுதியாகவே இப்போட்டி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக ஆதரவோடு நடத்தப்பட்டது.