பெட்டாலிங் ஜெயா, டிச 12 – கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, நமது அன்றாட வாழ்க்கையில் QR குறியீட்டின் பயன்பாடுகள் வழக்கமாகிவிட்டது.
இந்த QR குறியீடுகள் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது அது மோசடி குற்றங்களுக்குக்காக பயன்படுத்தடுவதாக அமாரான் ஸ்கேம் ‘Amaran Scam’ தனது வலைப்பக்கத்தில் எச்சரித்துள்ளது.
இந்த குறியீடுகளை மோசடி கும்பல்கள் நமது தனிப்பட்ட தகவல்களை திருடும் புதிய அணுகுமுறையாகவும் பயன்படுத்துகின்றார்கள்.
எனவே, பொதுமக்கள் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.