கோலாலம்பூர், மார்ச் 19 – அல்லா என அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜோகூர் இடைக்கால சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
அப்பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இஸ்லாமியர்களை பொருத்த வரையில், அல்லா என்பது மிகவும் புனிதமான, உயர்வான வார்த்தை.
அதனால், அது போன்ற பிரச்சனை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என, துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
எனினும், அவ்விவகாரம் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்காது எனவுன் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, அவ்விவகாரம் தொடர்பில், விநியோகஸ்தரை மையமாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்சுல் அனுவார் நசாரா நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.