கோலாலம்பூர், நவ 2 – GST எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அரசு இன்னும் ஜிஎஸ்டியை புதுப்பிக்கவில்லை. வரிக் கொள்கையில் எந்த மாற்றமும், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் தாக்கத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நேற்று நாடாளுமன்றத்தல் வழங்கியிருக்கும் பதிலில் பிரதமர் கூறயிருக்கிறார்.
எனவே, அரசாங்கம் தற்போதைய பொருளாதார நிலையை தொடர்ந்து கண்காணித்து, குறுகிய மற்றும் நடுத்தர காலக்கட்டத்திற்கு ஏற்ற நிதி நடவடிக்கைகளை பரிசீலிக்கும் என்று அவர் மேலும் கூறினார். நிதியமைச்சராக இருக்கும் அன்வார், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் நாட்டில் ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று தஞ்சோங் காராங் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கஃபேரி ஹனஃபி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது நிதியமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.