Latestமலேசியா

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினோசினியின் குடும்பம் மத்தியஸ்த முயற்சியை நிராகரித்தது; வழக்கைத் தொடர முடிவு

அலோர் ஸ்டார், அக்டோபர்-29, UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவி எஸ். வினோசினியின் குடும்பம், மத்தியஸ்த முயற்சிகளை நிராகரித்துள்ளது.

மாறாக, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கைத் தொடர அவர்கள் முடிவெடுத்திருப்பதாக குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார்.

UUM-மிடமிருந்து 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி கடந்த பிப்ரவரியில் அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்குத் தொடுக்கப்பட்டது.

எனினும் மத்தியஸ்த முறையில் அவ்விவகாரத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் இரு தரப்பையும் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், இது முழுக்க முழுக்க கவனக்குறைவால் நிகழ்ந்த உயிரிழப்பு என்பதால், பேசித் தீர்த்துக் கொள்ள ஒன்றுமில்லை.

மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என அவரின் குடும்பம் உறுதியாக உள்ளது.

நீதிமன்ற முழு விசாரணைக்கும் அவர்கள் தயாராக இருப்பதாக, வழக்கறிஞர் எம். மனோகரன் FMT-யிடம் தெரிவித்தார்.

அடுத்தாண்டு நவம்பர் 10 முதல் 12 வரை அவ்வழக்கு நீதிமன்றத்தில் செவிமெடுப்புக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.

கெடா, சின்தோக்கில் UUM பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதி அறையில் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வினோசினி இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாவே தனது மகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறி, வினோசினியின் தந்தை ஆர். சிவக்குமார் UUM-முக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!