Latestமலேசியா

ஜீவா கும்பல் தலைவன் மீது 10 குற்றச்சாட்டுகள்

ஈப்போ, நவ 9 – வீடுகளை உடைத்து கொள்ளையிட்டது, ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையிட்டது, ஆயுதக் கொள்ளை மற்றும் கொள்ளையின்போது காயம் விளைவித்தது உட்பட 10 குற்றச்சாட்டுக்கள் ஜீவா கும்பல் தலைவனான 34 வயதுடை குணசேகரன் மீது ஈப்போ செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஐனுல் ஷஹ்ரின் முகமட் முன்னிலையில் குணசேகரனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி ஈப்போவில் தாமான் ஈப்போ செலாத்தான் உட்பட பல இடங்களில் குணசேகரன் இக்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இன்னும் திருமணம் செய்யாத குணசேகரன் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!