
சியாட்டல், மே-26 – ஜப்பானின் தோக்யோவிலிருந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் செல்லும் வழியில், விமானத்தின் அவசக் கதவுகளைப் பயணி ஒருவர் திறக்க முயன்றதால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து All Nippon Airways நிறுவனத்துக்குச் சொந்தமான அவ்விமானம் சியாட்டல் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
அப்பயணியின் செயலால் அதிர்ச்சியடைந்த விமானப் பணியாளர்களும் இதர பயணிகளும் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
சியாட்டலில் தரையிறங்கியதும் போலீஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அந்நபர் உடனடியாக மருத்துவமனைக் கொண்டுச் செல்லப்பட்டார்.
அச்சம்பவத்தில் விமானத்திலிருந்த இதர பயணிகளுக்கு காயமேதும் ஏற்படவில்லை.
இவ்வேளையில், விமானம் சியாட்டலில் தரையிறங்கியதும் இன்னொரு பயணி மூர்க்கமடைந்தார்.
விமானம் திருப்பி விடப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் அவர் கழிவறைக் கதவை ஓங்கிக் குத்தினார்.
மோசமான நடத்தைக் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டு, விமானம் பின்னர் ஹூஸ்டன் புறப்பட்டது.
அச்சம்பவம் தொடர்பில் வழக்கேதும் பதிவுச் செய்யப்படவில்லை என, அமெரிக்க மத்திய குற்றப்புலனாய்வுத் துறையான FBI கூறியது.