Latestஉலகம்

இந்தியா, பாகிஸ்தான் மோதல், மலேசியாவுக்கான அரிசி விநியோகத்தை பாதிக்கலாம்

பாரிட் புந்தார், மே 6 – அரிசி ஏற்றுமதி செய்யும், இரண்டு முக்கிய நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆயுத மோதல், மலேசியாவின் பிரதான உணவான அரிசி விநியோகத்தைப் பாதிக்கலாம் என்று மலேசிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்துள்ளார்.

அவ்விரு நாடுகளும், உலக நாடுகளின் அரிசி தேவையைக் கிட்டதட்ட 30 விழுக்காடு பூர்த்திச் செய்வதோடு, மலேசியா, அரிசித் தேவையைச் சுமார் 38 விழுக்காடு பூர்த்திச் செய்கிறது.

இச்சமயத்தில் இரு நாடுகளுக்குமிடையே உள்ள மோதல், அரிசி விநியோகத்தில் குறிப்பாக அதன் விலையில் ஏற்றம் காணச் செய்யலாம் என்றும், இதனால் உள்நாட்டு மக்களின் வாழ்வாதரம் பாதிப்படையும் என்றும் முகம்ட் சாபு குறிப்பிட்டார்.

மலேசியாவில் தற்போது, அரிசி விநியோகம் சீராக இருந்தாலும், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

ஆகையால், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற ஏற்றுமதி நாடுகளுடன் மலேசிய அரசாங்கம் தற்போது உறவுகளை வலுப்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!