
பெட்டாலிங் ஜெயா, மே 14- மலேசியாவில், கடந்த ஆண்டு, நாட்டின் மக்கள்தொகை 34.1 மில்லியனைக் காட்டிலும், பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 38.7 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி (Zahid Hamidi) கூறியுள்ளார் .
இது, வரலாறு காணாத புதிய வாகன விற்பனையின் எண்ணிக்கையை 816,747-ஆக உயர்த்திருந்தாலும், சாலைப் பாதுகாப்பு அபாயங்களை அதிகரிப்பதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கின்றது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அண்டை நாடுகளையும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளையும் ஒப்பிடும்போது நாட்டில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டு விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது என்றும் தமதுரையில் பதிவிட்டுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர், நாட்டின் பொதுப்போக்குவரத்து தரத்தை மேம்படுத்தி, மக்களின் அன்றாட இயக்கத்தை எளிதாக்குவதற்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் சமூக நல்வாழ்விற்கும் துணைபுரிய வேண்டுமென்று கேட்டு கொண்டுள்ளார்.