Latestமலேசியா

‘Friendship Group’ என்ற பெயரில் WhatsApp குழுவில் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் போல ஆள்மாறாட்டம்; தீவிர விசாரணையில் போலீஸ்

கோலாலம்பூர், அக்டோபர்-22 – தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை (Datuk Seri Ayob Khan Mydin Pitchay) பெயரில் WhatsApp-பில் ஆள்மாறாட்டம் செய்து வரும் நபரை, போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.

‘FRIENDSHIP GROUP’ என்ற பெயரில் whatsapp குழுவைத் திறந்து, ஆயோப் கான் என தன்னை அடையாளம் கூறிக் கொண்ட ஒரு நபர் பலரையும் அதில் சேர்த்து வருகிறார்.

ஆனால், டத்தோ ஸ்ரீ ஆயோப் கானுக்கு whatsapp-பில் தனியாக உரையாடல் குழு (chat group) என்று எதுவுமில்லையென, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா (Datuk Rusdi Mohd Isa) தெளிவுப்படுத்தினார்.

எனவே, பொறுப்பற்ற தரப்பினரின் இது போன்ற ஆள்மாறாட்டத்தால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதோடு, போலீஸ் படையின் நற்பெயரும் கெடுவதாக டத்தோ ருஸ்டி சொன்னார்.

ஆள்மாறாட்டம் செய்யும் நபரின் கைப்பேசி எண்களைக் கண்டறிந்து விரைவிலேயே நடவடிக்கைப் பாயுமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!