வாஷிங்டன் , பிப் 22 – காஸா போரைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கான முதலாவது சேவையை தொடங்கவிருக்கிறது. தென் இஸ்ரேலில் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் தரப்பினருக்குமிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கிய பின் இஸ்ரேலுக்கான சேவையை மீண்டும் தொடங்கவிருக்கும் முதல் விமான நிறுவனமாக united Airline திகழும். காஸாவில் போர் தொடங்கியது முதல் யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்தா ஏர்லைன்ஸ் ஆகிய அமெரிக்க விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானச் சேவைகளை கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகமாக நிறுத்தின. அமெரிக்காவன் Newark நகரிலிருந்து Tel Aviv நகருக்கான விமான சேவையை அடுத்த மாதம் மீண்டும் தொடங்கவிருப்பதாக Chicago வை தளமாக கொண்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
5 hours ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
5 hours ago