மலாக்கா, ஜன14 – மலாக்காவில், மூன்று ஆடவர்களால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவர், இடது கை மணிக்கட்டில் காயத்திற்கு இலக்கானார்.
நேற்றிரவு மணி 9.30 வாக்கில், சுங்கை ஊடாங்கிலுள்ள, வங்கி ஒன்றின், பணப்பட்டுவாடா இயந்திரத்திலிருந்து பணத்தை மீட்டுக் கொண்டு வெளியே வந்த போது, அவர் தாக்குதலுக்கு இலக்கானதாக, மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் கிறிஸ்தோபர் பதிட் தெரிவித்தார்.
எங்கிருந்தோ திடீரென வந்த, அடையாளம் தெரியாத ஆடவர்கள் மூவர், மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த அந்நபரை தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக, அவ்விடத்தை விட்டு தப்பியோடிவிட்ட அந்நபர் பின்னர் தான் கையில் காயம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளார்.
தற்சமயம் அவர் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளை ; கடன் காரணமாக அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.