அமெரிக்கா, ஜன 5 – பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பயங்கரமாகச் சேட்டை செய்வது வழக்கம். ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில சமயங்களில் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் ஏதாவது செய்வதுண்டு.
அந்த வகையில், 4000 ஆயிரம் அமெரிக்கா டாலரை அதாவது 18 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்பட்ட பணத்தை நாய் ஒன்று விழுங்கி அதன் உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கிளேட்டன் மற்றும் கேரி லா இருவரும் செசில் என்ற 7 வயது நாயை வளர்த்து வருகின்றனர். இதனிடையே அந்த செல்ல நாய் அவர்களின் 18 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்பட்ட பணத்தை விழுங்கியுள்ளது. இது தெரியாமல் அவர்களும் பதற்றத்துடன் பணத்தைத் தேடியுள்ளனர்.
இந்நிலையில், சில நிமிடங்களில் அந்த நாய் விழுங்கிய பணத்தை வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. அப்போது, நாய் வாயிலிருந்து வெளி வந்த பண நோட்டுகளைப் பார்த்த அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெளியே எடுக்கப்பட்ட நோட்டுகளைச் சுத்தம் செய்து அதன் உரிமையாளர் வங்கியில் புதுப்பித்துக் கொண்டுள்ளார். இருப்பினும், 450 டாலர் அதாவது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் வெளியே எடுக்க முடியவில்லை எனவும், தனது வாழ்க்கையில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை எனவும் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.