Latestமலேசியா

தாய்லாந்தில், பாலம் இடிந்து விழுந்தது ; 15 சிறுவர்கள் காயம்

பேங்கோக், ஜன14 – தாய்லாந்தின் தென் மாவட்டமான சாதுனில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் தினக் கொண்டாட்டம் துயரத்தில் முடிந்தது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த அவசரப் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 15 சிறுவர்கள் காயமடைந்தனர்.

உள்நாட்டு நேரப்படி நேற்று காலை மணி 11.45 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

பாலத்தை தாங்கி இருந்த கயிறு திடீரென அறுந்ததால், அவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், அவ்விபத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!