Latestமலேசியா

பேராக்கில், நான்கு பிள்ளைகள் கைவிடப்பட்ட சம்பவம்; தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டான்

ஈப்போ, டிசம்பர் 1 – தனது பத்து மாதம் முதல் 11 வயதுக்கு உட்பட்ட நான்கு பிள்ளைகளை கைவிட்ட குற்றச்சாட்டை, அவர்களின் தந்தையான 33 வயது ஆடவன் ஒப்புக் கொண்டான்.

கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி, காலை மணி 10.44 வாக்கில், பேராக், கம்போங் காஜா நிர்வாக மையத்திற்கு முன்புறம், பாதுகாவலர் முகப்புக்கு அருகில், தனது 11 வயது, 3 வயது மற்றும் பத்து மாதம் நிரம்பிய மூன்று ஆண் பிள்ளைகளையும், ஆறு வயதான பெண் பிள்ளையையும் ஆதவின்றி கைவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே சமயம், குறைந்தது 36 மணி நேரம் அல்லது அதிகபட்சம் 240 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்படலாம்.

இவ்வழக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி ஆறாம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.

முன்னதாக, நான்கு சகோதரர்கள், பேராக் தெங்ஙா நிர்வாக அலுவலகத்திற்கு முன் ஆதரவின்றி கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவ்விவகாரம் தொடர்பில், மாநில சமூக நலத் துறை செய்த புகாரை தொடர்ந்து, அவர்களின் பெற்றோர் என நம்பப்படும் ஆடவன் ஒருவனும், பெண் ஒருவரும் தனித்தனியே கைதுச் செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!