கோலாலம்பூர், ஜனவரி 5 – கோலாலம்பூர், ஜிஞ்சாங்கில், தனது முதலாளியின் ஒன்பது வயது மகளை கற்பழித்த ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர்.
அச்சம்பவம் குறித்து, கடந்த செவ்வாய்கிழமை, சம்பந்தப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, அந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவனின் செயல் அம்பலமானது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம் வேலை செய்து வந்த அந்த ஆடவன், கடந்த மாதம் பாதியில் அச்செயலை புரிந்ததாக கூறப்படுகிறது.
எனினும், அண்மையில் தான் அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததால், அச்சிறுமி சிகிச்சைகாக உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை; அவரது பெற்றோர்கள் ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜித், தலைமறைவாகி இருக்கும் சம்பந்தப்பட்ட ஆடவனை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.