ஒடிசா, டிசம்பர் 22- ஒடிசா மாநிலத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க கனரக வாகன ஓட்டுனர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓடிசாவில் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் குறிப்பாக அதிகாலை வேளைகளில் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் கனரக ஓட்டுநர்களுக்கும் இலவச தேநீர் வழங்கம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இன்று தொடங்கி ஜனவரி 7, 2024ஆம் ஆண்டு வரை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை, ஓட்டுநர்களுக்குத் தூக்கம், சோர்வுகளைக் குறைக்க இலவசமாக டீ வழங்கிட தொடங்கப்பட்டுள்ளது.