கோலாலம்பூர், பிப் 29 – ஷா அலாம் Setia Alamமில் அடுக்ககத்தின் 23 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த தாய்லாந்து பெண் ஒருவர் மரணம் அடைந்தார். நேற்றிரவு மணி 10.02 அளவில் அந்த சம்பவம் குறித்த தகவலை போலீசார் பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Iqbal தெரிவித்தார். அந்த பெண்ணை அவரது நண்பர் என நம்பப்படும் 37 வயதுடைய லோரி ஓட்டுனர் கீழே தள்ளி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 32 வயதுடையை தாய்லாந்து பிரஜையான அந்த பெண் வேலையில்லாதவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் அந்த சந்தேக நபரும் காதலார்கள் என்று Mohd Iqbal தெரிவித்தார்.
கீழே விழுந்து இறந்த அந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட அந்த பெண் அந்த அடுக்ககத்தின் 7ஆவது மாடியின் தரையில் விழுந்ததாக Mohd Iqbal தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழி Cannabis போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதோடு ஏழு குற்றச்செயல்கள் பின்னணியையும் கொண்டுள்ளார். நேற்றிரவு மணி 10.10 அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.