Latestமலேசியா

பாசிர் பூத்தேவில் புலிகள் தோன்றியதா? வனவிலங்குத்துறை மறுப்பு

கோட்டா பாரு , அக் 29 – ஜெரம் மெங்காஜி, பாசிர் புத்தேவில் புலிகள் குழு தோன்றிய தகவல் திங்கட்கிழமை முதல் சமூக ஊடகங்களில் வைரலானதை பெர்ஹிலித்தான் எனப்படும் கிளந்தானின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத்துறை மறுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட ‘ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலி குடும்பம்’ என்ற யூடியூப் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் இது என்று அதன் இயக்குனர் முகமட் ஹபிட் ரோஹானி ( Mohamad Hafid Rohani ) தெரிவித்தார். அதைச் செய்யும் தனிநபர்களின் பொறுப்பற்ற செயல்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

இது போன்ற பொய்யான செய்திகளால் பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் என முகமட் ஹிபிட் கூறினார். சம்பந்தப்பட்ட விஷயத்தை நம்புவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் முன் சரியான ஆதாரத்தை முதலில் சரிபார்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, ஐந்து புலிகளின் வைரலான புகைப்படம் ஜெராம் மெங்காஜியில் தோன்றுவதாகக் கூறப்பட்டது. இது வாட்ஸ்அப் புலனம் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் பகிரப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!