Latestமலேசியா

4 ஆம் படிவ மாணவி கற்பழிப்பு; போலீஸ் சார்ஜன்ட் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, பிப் 8 – 4 ஆம் படிவ மாணவியை காரில் கற்பழித்தாக போலீஸ் சார்ஜென்ட் ஒருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி ஐனுல் ஷஹ்ரின் முகமட் முன்னிலையில் குற்றஞ்சாட்டபோது 42 வயது ஷரில் அமீர் ஷாஹ்ரி அதனை மறுத்தார். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஸ்ரீ இஸ்கண்டாரில் உள்ள பேரங்காடியின் கார் நிறுத்தும் பகுதியில் 16 வயதுடைய மாணவியை கற்பழித்ததாக அந்த போலீஸ்காரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 376 விதியின் உட்பிரிவு (1) இன் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் கீழ் 5,000 ரிங்கிட் ஜாமின் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!