
சிரம்பான், மே 13- அண்மையில், நெகிரி செம்பிலான் இந்திய ‘திரை லீகா’ 2-ஆம் ஆண்டு காற்பந்து விளையாட்டு போட்டி, திவி ஜெயா விளையாட்டுக் கழக நிர்வாகி மற்றும் நெகிரி செம்பிலான் மாநில காற்பந்து சங்க நிர்வாக அதிகாரி திரு.காளிதாசன் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடந்தேறியது.
வருடத்திற்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியில் 25 வயதிற்குட்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிர்வாக அதிகாரியும் நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்தின் துணைத் தலைவருமான Yb டத்தோ ஹெச்ஜே முஸ்தபா பின் நாகூர் (Yb Dato Hj Mustapha Bin Nagoor)ஹ் கலந்துக்கொண்டது மேலும் சிறப்பைக் கூட்டியது.
இப்போட்டியில் வெற்றியாளராக பூங்கா ராயா A அணியும், பகாவ் லெக்கா (Bahau Leggah) இரண்டாம் நிலையிலும் வெற்றி வாகைச் சூடின.
பூங்கா ராயா B மற்றும் திவி ஜெயா SC அணியினர் மூன்றாம் இடத்தைத் தட்டிச் சென்றனர்.
இதனிடையே, போட்டி விதிகளை மதித்து, நேர்மையாக விளையாடிய அணியாக (Fairplay), Jempol Dreams தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதோடு, சிறந்த பூங்கா ராயா A அணியைச் சேர்ந்த சசிதரன் சிறந்த ‘கோல் கீப்பராகவும்’., சே. நேசமணி சிறந்த கோல் ஷூட்டராகவும் அங்கீகரிக்கப்பட்டனர்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக, பூங்கா ராயா A அணியைச் சார்ந்த ர. திரிஷென் சிறந்த காற்பந்து விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் காற்பந்து போட்டியில், FAM இன் துணைத் தலைவரும், நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்தின் துணைத் தலைவருமான திரு.சரண் நடராஜா, நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்தின் Exco உறுப்பினர் திரு.தனபாலன், சிரம்பான் நகர சபை உறுப்பினர் திரு.பாலன் ராகவன், நெகிரியின் Exco உறுப்பினர் திரு.R.ராஜேந்திரன், மற்றும் எம்.ஐ.சி. பயிற்சியாளர் இஷாக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தினர்.
இறுதியாக திவி ஜெயா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் காளிதாசன், பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் தனது வாழ்த்துகளையும் இந்நிகழ்விற்கு ஒத்துழைத்த என்எஸ் இந்தியக் குழுவிற்கும் மற்றும் இந்திய லீக்கை ஏற்பாடு செய்ய அனுமதி அளித்த நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.