
ஷா ஆலம், மே 20- மின் சிகரெட்டுகளின் (வேப்ஸ்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, வேப்ஸ் தயாரிப்பு விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று, சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்ததவிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை, இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் வேப்பிங் பயன்பாட்டைத் கட்டுப்படுத்தும் முயற்சியில் எடுக்கப்பட்டதென்று, மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் (Jamaliah Jamaluddin) கூறியுள்ளார்.
2022-இன் தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மையின் (NHMS) கணக்கெடுப்பின்படி, மலேசியாவில் 13 முதல் 17 வயதுடைய இளைஞர்களில் கிட்டத்தட்ட 14.9 விழுக்காட்டினர் வேப் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிக அவசியமென்பதையும் அவர் குறிப்பிட்டார்.