Latestமலேசியா

தைப்பிங்கில், தன்னை தானே காயப்படுத்திக் கொள்ள முயன்ற மாற்றுத்திறனாளி; சமாதானப்படுத்தி மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்

தைப்பிங், நவம்பர் 29 – பேராக், தைப்பிங், தாமான் லோங் ஜபாரிலுள்ள, வீடொன்றின், அறையில், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள முயன்ற, மாற்றுத்திறனாளி ஒருவரை, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னிரவு மணி 1.45 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.

அவசர அழைப்பு கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தைப்பிங் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், அறை ஒன்றில், தன்னை தானே காயப்படுத்திக் கொள்ள முயன்ற, மனநல நோயாளியும், மாற்றுத்திறனாளியுமான அந்த 21 வயது ஆடவரை சமாதானப்படுத்தி, மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!